Thursday, November 5, 2009

இரண்டு கவிதைகள்...



உங்களை ஏன்
சந்தித்தேன் என்றிருக்கின்றதாக
நீ சொன்னதன் அர்த்தம்
நான் அறியேன்...

நம்மை
சந்திக்க வைத்தவனிடம்
நீயே கேட்டுப்பார்..!
அவர் உன்
அறைகளின் இரும்புத்திரையை
திறந்து
நம்
பூங்காவின் வழியை
உனக்கு காட்டுவார்...

நீ சொல்வாயே
நான் அப்படிதான் என்பதன்
அர்த்தம் அப்போது
புரியும்...



02



என்னை
நம்ப வேண்டும்
என்று விண்ணப்பம் செய்தேன்...
நீயோ
அதை நான் என்று
உணரும் போது
நம்புவதாக
தட்டச்சி செய்தாய்..
இப்போதாவது சொல்...
எதை உணர்ந்த பின்பு
என்னை முழுமையாக
நம்புவாய்...??

என் மனம் இப்போது
இவ்வளவு
பாழடைந்த தேவாலயமான
பின்புமா
என்னை நீ நம்பவில்லை
சொல்...?