Saturday, April 30, 2011

Kalyana Then Nila - Mownam Sammadham - Mammootty & Amala - Music by Ilai...

Wednesday, April 27, 2011

நீ எழுதும் கவிதை.....



ஞாபகத்தின் கோடுகள் உன்
பால் மனம் மாறாத கருணையை
என் தாகம் கொண்ட ஏகாந்த மனதில்
மழையின் சாரலை துாவுகின்றது
என் ப்ரியத்துக்குரிய ப்ரியமே....

சற்றெ வந்தாய் சலனத்தின்
ரேகைகளை அத்தனை அழுத்தமாக
உன்னால எப்படி பெண்னே பதிக்க
முடிகின்றது....

இருவரும் ஓரே நேர் கோட்டில்
சந்தித்த காலத்தின் தீராத புதிரை
இனி என் இரவுகள்
நதியின் பள்ளத்தாக்கில்
விழுந்த படகைப் போல
நீ
மனதின் பாடலை ஏன்
சந்தியா ராகத்தில்
புனைந்தாய்.....?

மறுமுறையும் மறுமணம்
சாத்தியத்தின் வாசல்
உன்னால் உத்தரவு பெற்றால்
நான் சாகாது உன்னில்
இறுதி வரையும் வருவேன்
உன் கைப்பிடித்து -------------
நம் வானத்தின் ஓர் அழகிய
பட்டமாவான்.....
நீ
புதிர்களை என்னிடம்
முழுவதுமாக அவிழ்கும் போது
இரவுகளின் சாரளம்
நம் இருவரின் துயர கவிதையை
வானத்தின் நீளம் போல்..
என் சலனமுள்ள தனிமை காலம்
இனி உன் தோழின் ஸ்பரிசத்தில்
சாய்ந்து..சாய்ந்து....
நாம் ஆகாயத்தின் நீளமெங்கும் பதிக்கும்
உயிரை உன் பளிங்கு இதயத்துடன்
முத்தமிட்டு பதிக்க என் அகதி மனம்
ஆசையுடன் துடிக்கின்றது பெண்னே....

நீ
இனி என்ன பேசுவாயோ....
அது என்னை குறித்து
பேசுவாயா...இல்லை
இனியும் நான் தனித்து வாழும்
தீவுகளின் பேய்களுடன்
திருமணமா....
புரியவில்லை இன்னும்
நீ வானில் சலனமில்லா
நிலவாக வருகின்றாய்...
கவிதைகளினால் என் .இரவுகளில்
உன் தாதி முகம் என்
நோயை குணப்படுத்துகின்றது செல்லமே....

டியர் என்ற உன்
வார்த்தைகள் என்னில் ஓர்
அனலாக எரிக்கினறதுஎன்பதை நீ
அறிவாயா அனபே.....?
..................................................................
இரவு: 11.59 / 25/04/2011

Monday, April 25, 2011

அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்


பிரசன்ன விதானகே

திரைப்படம் குறித்த மனப்பதிவு

மாரி மகேந்திரன்


ரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. 'ஆகாயப் பூக்கள்' திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.



கொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கி;யம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் - தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.

அதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க 'ஆகாயப் பூக்களின்' திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன். நண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம்.

எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தான். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது. அவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோ பாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முக்ததை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.

மற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவாகவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது. வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது. மற்ற திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே. நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.

                    








நானொரு பெண்ணிய இயக்குநரா என்று
மற்றவர்கள் என்னிடம் கேட்கும்பொழுது:
'நான் ஒரு பெண். நான் சினிமாக்களும் எடுக்கிறேன்;'
-சாந்தால் அகர்மான்-

எனறு சாந்தால் அகர்மானின் மேற்கோள் கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள்.

'உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது. மனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது.

மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் 'பெண்' என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் 'பெண்' என்ற வஸ்துவை குறித்த ஆண்மையின் பார்வை என்பது 'வேசித்தனம் பண்ணுபவள்' தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு. நிம்மி ஹரஸ்கம என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் யுரபரளவ ளரn திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று. நல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.

ஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..

வெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா
2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா

சிறந்த நடிகை – மாலினி பொன்சேகா
2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா - இத்தாலி

ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது
2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா - ஸ்பெயின்

ஜூரியின் கௌரவிப்பு
2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா
..................................................................................................................................................................

மழை...........




மழையின் சுவாசம்
அவளின் ஸ்பரிசத்தின் தடத்தை
முன்னொரு முறை இடைவேளை வரை
முடிக்காத மழை ஞாபகத்தின்
சலனம் வரும்
இசையின் சாரல் என்
பாடலின் கடைசி சந்தமும்
உன் கவிதையின் புணர்ச்சி மனமும்
தாலாட்டின் கதைகளை சொல்கிறது...
மழைக்கா ஏங்கியவர்கள் பின்
மழைக்கா காலத்தில்
பிரிந்தார்கள்...
அவர்கள் கொண்டு வந்திருந்
குடையின் விரிசல்கள்
வாசலில ....
தனிமையை துயரமாக
உன் கவிதையையும்
எடுத்துக்கொண்டு பயனிக்கின்றது
சேகியே....

பின்குறிப்பு-
மெல்லிய வரிகள் தந்த கவிதைகள்.

மாலை 6.19......

Friday, April 22, 2011

இயேசுவின் பரம அன்பு...




ஒரு சாட்சி

மாரி மகேந்திரன்

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்இ தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மாற்கு 8:36இ37 (ஆயசம 8:36இ37)

சினிமா என்ற ஓர் வஸ்து எனக்குள் எப்படி வேர்கொண்டது என்பதைப் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. என்னை சினிமாவுக்குள் இழுத்து சென்றது எது? ஏன் சினிமாவை, கலையை வாழ்வாக ஆக்கிக்கொள்ள துணிவு ஏற்பட்டது. சினிமாவை வாழ்வாக ஆக்கிக் கொண்டதனால் இழந்தவைகள் அனேகம் ஆனாலும்.

சுpனிமா என்கிற வசீகரிக்கும் ஆயுதம் என் இருதயத்தை பிடித்து இழுத்து சென்றது ஏன்? எது?. எல்லோரிடமும் ஒரு பெலவீனம் உண்டு. அது போல் என்னிடத்திலும் சினிமா ஒரு பெலவீனமாகத்தான் குடிகொண்டுள்ளது. சினிமாவில் நான் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. (அது கூட நல்லதற்குத்தான் என்பது வேறு விடயம்) ஆனால் இந்த சினிமாவின் மீது எனக்குள்ள ஆசை வர காரணமாக இருந்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை நான் கண்டடைய சுமார் ஒரு 20 வருடத்தையும் தாண்டி செலவளித்து விட்டேன். இதற்கான பதிலை நான் கண்ட போதுதான். எனக்குள் ஒரு ஒளி உட்புகுந்து என்னை பெலப்படுத்தியது. அந்த பதில் இதுதான்.

நசரேத்தூர் இயேசு ((JESUS OF NAZARETH) ) இந்த திரைப்படம் தான் என் வாழ்க்கையை திரைப்படத்துறை நோக்கி அழைத்து சென்றது. திரைப்படத்தை கண்ணும் கருத்துமாக நேசிக்க வைத்தது. இப்படம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப் படத்தை ஃவிறாங்கோ ஸெவிஹெல்வி என்ற இயக்குநர் உருவாக்கியிருந்தார். இதில் இயேசு நாதராக ஹொபேட் போவேல் நடித்திருந்தார். 397 நிமிடங்கள் கொண்ட இத்திரைக் காவியம் பார்ப்பவர்களின் இதய கிடங்கை வலுவாக தாக்க கூடியது. இத் திரைப்படம் இன்று வரை இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகம் வரை வெளிவந்துவிட்டது. ஆனால் நான் எனது பள்ளிக்காலத்தில் பார்த்த முதல் திரைக்காவியம் இப்படம் தான். இத்திரைப்படம் என்றும் என் வாழ் நாளில் மறக்கவே முடியாத படிக்கு மானசீகமானதொரு வலியை என் விபரம் புரியாத வயதில் ஏற்படுத்தியிருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. திரைப்படம் என்ற போது பொதுவாக மக்களின் மனதை தாக்க கூடியதுதான். ஆனால் 'திரைப்படம்' என்ற அளவில் இப்படம் என் மனதை தாக்கவில்லை. இயேசுவின் சிலுவைப்பாடுகள், அதைக் காட்சிப்படுத்தும் விதம், அவரின் சுவிஷேசம், யூதாசின் காட்டிக்கொடுப்பு என்று இன்றும் என் மன கண்ணிலிருந்து பிரிக்க முடியாத படிக்கு இப்படம் என்னுள் என் மனசாட்சிகளை விழிக்க வைக்கிறது. இயேசுவின் கல்வாரியின் இரத்தம் பாவிகளின் இருதயத்தையே ஒரு கணம் ஸ்தம்பிதம்படுத்தும். நான் இப்படத்தை பார்க்கும் போது ஆண்டு 2 அல்லது 3இல் தான் கல்வி கற்றிருப்பேன். இப்படத்தை யுழுபு சபையினால் தான் பாடசாலையில் திரையிட்டிருந்தார்கள். அன்றைய நாளில் மழை பெய்து இருந்தது. படத்தை பார்த்துவிட்டு நான் வீட்டிற்கு சென்ற போது அம்மா ஏன் தம்பி இப்படி மழையில் நனைந்துகொண்டு வருகிறாய். என்று கேட்டுவிட்டு எங்கே குடை என்ற போதுதான் எனக்கு நான் மழையில் நனைந்தது தெரிய வந்தது. அந்த வயதில் நான் கொண்டு போயிருந்த அந்த கருப்பு குடை தொலைந்து போய்விட்டது. பசுமையும், இளமையும் மாறாத என் பால்ய வயதில் இளம் பிராயத்தில் தொலைக்க முடியாத இயேசுவின் அன்பு மழையை சுவைக்க தெரிந்திருந்ததே என்பதை நினைக்கும் போது, இன்றும் மறக்க முடியாது. இந்த திரைப்படத்திற்கு பின்பு தான் நான் சினிமாவின் மீது மோகம் கொண்டேன். இதன் தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களை தேடிப்பார்க்க தொடங்கிய காலங்கள் இதுவரை சினிமாவுக்கான புள்ளியை எண்ணில் விதைத்தவர் இயேசுவே.

ஆனால் அதற்கு பின்பு நான் சினிமா மீது கொண்ட காதலினால் தமிழ் சினிமாவில் எப்படியாவது நுழைந்து ஒரு நடிகனாக வர நினைத்தேன். ஆனாலும் நடிகனாக அழகு வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் இயக்குனராக வரலாம் என்பதற்கான முயற்சியுடன் இந்தியாவிற்கு சென்று திரைப்படத் துறையில் முயற்சி செய்யலாம் என்பதற்கான உத்வேகத்துடன் தமிழ் நாட்டிற்கு 1996 ஆம் ஆண்டு பயணமானேன். நல்ல சினிமா மீது எனக்கிருந்த ஈடுபாடு அங்கு சென்ற பின்பு சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தது. இந்த உடைவு என்பது வெறுமனே நோக்கத்தை மட்டுமல்ல வாழ்வின் மீதும் வெறுமையை சூழச் செய்தது. அண்மையில் எனது நண்பர் அசினுடன் ஓர் நேர்காணலில் தமிழ் சினிமாவை உருவாக்குவது இலகுவானது..... ஆனால் தமிழ் சினிமாவின் மீது கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிறுவன நிலைபாடு தான் நல்ல சினிமாவையோ, சாதாரண சினிமாவையோ உருவாக்க கால தாமதத்தை தருகின்றது. அத்தோடு ஒரு Manager Ak;> ManagementIம் தெரிந்து கொள்ளத்தான் பல வருடங்கள் கடந்து விடுகின்றது என்கிற உண்மை சத்தியமானது என்பதை விட அது தான் உண்மையும் கூட. தமிழ் சினிமாவில் இயங்குவதற்கு ஒவ்வொருவருக்கும், பாரத்தை தருவதும் இந்த மனோபாவம் தான். அதனால்தான் இந்த மனிதர்கள் போலவே அவர்களின் சினிமாவும் பாவத்தை உருவாக்கும் ஊற்றாக இருக்கின்றது. தமிழ் சினிமா பெரும் பாவ சாபத்தை சாதாரண மனிதனின் வாழ்வில் வைத்து சென்று விடுவதோடு சாத்தானின் ஆயுதமாகவும் உள்ளதை நாம் எப்போதும் அறிவோம். பாவத்தை தேடும் பாவிகளாக மாற்றும் இயக்குனர்களுக்கும்;, தயாரிப்பாளர்களுக்கும் தாம் செய்வது பாவம் என்பதை எப்போது தான் அறிவார்களோ.

தமிழ் நாட்டிலிருந்த அந்த காலங்களில் தமிழ் சினிமாவில் ஒரு உதவியாளனாக இயங்கினாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஏதோ ஒரு தவறை செய்வதாக எனக்குள் ஏதோவொன்று பேசினாலும், பயணம் தொடர்ந்தது. சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் சென்று வேலை செய்தாலும் மனதில் சந்தோஷம் என்பதோ, சமாதானம் என்பதோ கொஞ்சமும் இல்லாமல் இருப்பதை உணர முடிந்தது. ஆசையோடும், இலட்சியத்தோடும், சினிமாவை விருப்பதோடும் ஏற்றுக்கொண்டாலும் மனதில் அமைதி இழந்தவனாக, பைத்தியக்காரனாக, பரதேசியாக ஏமாற்றப்பட்டவனாக உதாசீனப்படுத்தப்பட்;ட ஒரு பாண் துண்டாக, ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாதவனாக எல்லா இடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட மனதுடன் ஆத்மாவை தொலைத்து நிம்மதி இழந்தவனாக அலைந்த நாட்கள் அதிகம். வேலையேதும் செய்ய முடியாத படிக்கு என் சோம்பலும், அதீதமான கருத்துக்களும் மாயை தந்து திருப்தி படுத்த பார்த்தது. கோயில், அத்வைதம், ஞானமடைதல், ஓஷோ, மெய்யுணர்வு, யோகாசனம், தியானம் என்று பல்வேறு வழிகளிலும் புத்தியை செலுத்தினாலும் அமைதிக்கான இடம் எங்குமே புலப்படவில்லை. விரக்தி, வேதனை, தனிமை, அன்புக்காக ஏங்கும் மனத்தோடு சொல்ல முடியாத துயரத்தோடு அலைந்தேன். வேதாகமத்தில் பிரசங்கியின் வார்த்தைகள் பேசுவது போல்

ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும்
மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்
மனதை பிரயோகம் பண்ணினேன். இதுவும்
மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறது என்று கண்டேன்.
(பிரசங்கி : 1-17)

மனதை திருப்திபடுத்தும் முயற்சியில் அலைந்த அலைச்சலில் உடலும் மனதும் தன் நிலையை இழந்து, வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் விரக்தியும், வெறுப்புணர்வும், தோல்வி மனோபாவமும் என்னை தற்கொலையை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது தான் மீண்டும் நான் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. மீண்டும் 8 வருட காலத்திற்கு பின்பு வீட்டிற்கு திரும்பினேன். வீடு கொஞ்சம் மன பாரத்தையும், வலியையும் தீர்த்தாலும். மறுபடியும் ஏதோ ஒரு துயரம் வருமோ என்பதற்கான நிலையுடன் திருமணம் இன்னுமொரு துயரத்தை தரும் என்பது தெரியாமலேயே அதனுள் விழுந்தேன். பசி, பட்டினி, என்ற வேதனையோடு அலைந்த நாட்களில் ஏதோவொரு தைரியம் இருந்தது. ஆனால் திருமணம் மனதின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் சுக்குநூறாக உடைத்தெரிந்தது. எல்லாம் தகர்ந்து நிர்க்கதியான நிலையில் 'வெறுமை' சூனியம் சூழ நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் முன் வந்து நினறேன்.

'பதவி ஆசைக்காக உழைத்தவர் உச்சம் கண்டதில்லை!
பணத்திற்காக உழைத்தவர் வரவும் கண்டதில்லை!
மனிதனுக்காக உழைத்தவர் மகிழ்ச்சி கண்டதில்லை!
ஸ்தாபனங்களுக்காக உழைத்தவர் சமாதானம் பெற்றதில்லை!
கொள்கைக்காக உழைத்தவர் பலன் கண்டதில்லை!
இம்மையில் நன்மை தேடி உழைத்தவர் பரிசுகள் பார்த்ததில்லை!
கிறிஸ்துவின் நாமத்திற்காக உழைத்தவர் பயம் அறிந்ததில்லை!
நி;த்திய பாக்கியத்திற்காக உழைத்தவர் வெட்கம் அடைந்ததில்லை!
(நன்றி: விஷ்வவாணி சஞ்சிகை)

வாழ்க்கையை தொடர்ந்தும் நரகமாக்கிக்கொண்டதன் முடிவாகத்தான் திருமண உறவு அமைந்தது. உணர்வுகளையெல்லாம் அது தாக்கி தன்மையை நோக்கி என்னை அழைத்து சென்ற போது இயேசுவின் அன்பு மாத்திரம் தான் என்னுள் இருந்த பாரத்தை இறக்கி வைக்க உறுதுணையாக கிடைத்த இறுதி சரணாகதி. கிட்டத்தட்ட இயேசுவோடு என் உறவு பல வருடங்களாக தொடர்ந்து வந்திருந்த உணர்வை ஆண்டவர் என்னை தொட்ட போது உணர்த்தினார். இதுவரை கண்டிராத சமாதானம் உலகின் பெயரால் ஏற்படவில்லை. தேவனின் பெயரால் ஏற்பட்;டது. தேடி வந்து அன்பு செய்த தேவன் எனக்குள் இரட்சிப்பை தந்தார்.

இதனால் நான் சந்தித்திராத பெரிய பலத்த சந்தோஷம், நிம்மதி, சமாதானம் எனக்குள் பற்றிப் படர்வதையும் என் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாக மாறுவதையும் என் இருதயம் சந்தோஷத்தின் வாசலில் நின்றும் என் தகப்பனின் என்றும் மாறாத அன்பின் தழும்பில் மூடிக்கொள்வதையும், இரட்சிப்பின் மகிமையையும் என்னால் எப்படி வார்த்தைகளில் சொல்லி விட முடியும். இயேசுவின் பரிசுத்த அன்புக்கு முன்பு மனித வார்த்தைகளும், மொழிகளும், அருகதையற்று போவதை நான் பல்வேறு தருணங்களில் அடைக்கப்பட்ட ஸ்தம்பிதமான மனோநிலையுடனும், கண்ணீர் பெருக்கெடுக்கும் அந்த தேவ அன்புக்கு முன்பு என் எல்லா நியாயங்களும் தேவனிடம் சரணாகதி அடைகின்றது.

' உனக்குண்டான எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுங்கையனாக என்னிடம் வா. நான் எனது விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த அந்த இரட்சிப்பை உனக்கு இலவசமாக தருகிறேன்!' என்ற இயேசுவின் வார்;த்தைகள் சத்தியத்தின் ஒளி. இருளின் குழந்தைகளாக வாழும் பாவிகளின் மீட்பர் இயேசு.

தொடரும்......

Thursday, April 14, 2011

Before Dawn - Balint Kenyeres (short film clip) cinema16.org


This 12-minute film by Hungarian filmmaker Balint Kenyeres shows us how impressive cinematography can heighten the impact of a film. The entire film is one continuous shot, no cuts, tracking a truck transporting refugees through a wheatfield in the wee hours of the morning. Suite101.com writer Rhett Murphy summarizes the filmmaking techniques employed here:

Shot by Matyas Erdely, the look is muted in grey tones. Color is primarily used with the truck (hope) and the lone refugee (hope destroyed). Sound is used purely for story and suspense – from birds taking flight (freedom), to the truck (hope), to the chaotic captures (hope destroyed). Everything here is laser-focused on the story.

The economy of filmmaking used here - from the lack of cuts to the single setting to the sparse color to the lone close-up – serve to make this film a complete and unique experience. The film racked up plenty of awards and film festival screenings.

LINKhttp://alisashortfilm.wordpress.com/

உன் சந்திப்பு தந்த ஞாபகங்கள்…

இருப்பிடம் தவறிப்போனதவிட்டுக் குருவியின்

தவிப்பை போல
நாளைய வாழ்வு பற்றிய
ஏக்கங்கள் எனக்கும்
தொற்றுகின்றது….

உனது முடிவை மாற்றிக் கொள்ளச்

சொல்லும்

வாழ்வின் வண்ணம்

ஒபபனைகளையும்

இனைத்து தூரப்படுத்துகிறது…

தீடீரென்று

காதலை முறித்து

மௌனமாகி போகும்

உனது குரல்களின்

வசீகர மர்மத்திற்கு

பின்பு மறைந்திருக்கும்

இரகசியங்களை உனது

கனவனோடும் பகிர்ந்து…

அந்நரங்மாக பெய்த

மழையின் வரிகளை உன்னால்

எப்படி மறக்க முடிகிறது…

உனது இதயத்தைப் பற்றிய

மையப் புள்ளயாக எனக்கு

மட்டும் காட்டிய மச்சத்தை

பற்றிய மனது மட்டும்

மையப்புள்ளியாக அவ்வப்போது

நீர்கோடுகளை

வரைகிறது…

உனது வசிகர நாட்களில்

எனது விரல்கள் தீண்டிய

குறியின் அடை மழையில்

முத்தங்களும் ஸ்பரிசங்களும்

உனது அம்மாவுக்காகவும்

அப்பாவுக்காகவும் மறந்து

போகலாம்…!!!

ஆனால்

மனவெளிகளில் இருள்காட்டில்

மிருகங்களை

உனது விளையாட்டு

பொம்மைகளைப் போல

உன் உறக்கத்தை

தட்டி எழுப்பலாம்…!

02

உனது மார்பு கசக்கும்

உதடுகளில்

பிம்பங்களும் நடு நெஞ்சின்

மையத்தில் உன் மச்சங்கள்

உனைப்பார்த்து

கேலி செய்து உனது

ஒழுங்கீனமான

நடவடிக்கையை

காலத்தின் இருள்கள்

உனது நிழலாக வரலாம்..?

உனது பிரார்த்தனைகளும்

வழிபாடுகளும்

உயிர்ப்பற்று சிதிலமாகலாம்…

பாவியுடனான வழிபாடாக

ஏதோ ஒன்றை

உனது ஆத்மா இழக்கலாம்…

அல்லது

உனக்கு மறப்பதற்கு

முடிவது இலகுவானதென்றால்

அனைத்தையும்

ஒரு பஸ் பயணத்தைப் போல

மறந்து விட்டு

குழந்தைகளை மடியில்

வைத்து கொஞ்சலாம்…

இன்னும் நீயும்

உன் கனவனும்

கிரிக்கெட் மெச் பார்க்கலா

சுதர்ஷினிக்கு