Thursday, November 5, 2009

இரண்டு கவிதைகள்...



உங்களை ஏன்
சந்தித்தேன் என்றிருக்கின்றதாக
நீ சொன்னதன் அர்த்தம்
நான் அறியேன்...

நம்மை
சந்திக்க வைத்தவனிடம்
நீயே கேட்டுப்பார்..!
அவர் உன்
அறைகளின் இரும்புத்திரையை
திறந்து
நம்
பூங்காவின் வழியை
உனக்கு காட்டுவார்...

நீ சொல்வாயே
நான் அப்படிதான் என்பதன்
அர்த்தம் அப்போது
புரியும்...



02



என்னை
நம்ப வேண்டும்
என்று விண்ணப்பம் செய்தேன்...
நீயோ
அதை நான் என்று
உணரும் போது
நம்புவதாக
தட்டச்சி செய்தாய்..
இப்போதாவது சொல்...
எதை உணர்ந்த பின்பு
என்னை முழுமையாக
நம்புவாய்...??

என் மனம் இப்போது
இவ்வளவு
பாழடைந்த தேவாலயமான
பின்புமா
என்னை நீ நம்பவில்லை
சொல்...?

Tuesday, October 20, 2009

உனது வார்தைகள்...

இரவும் வந்தது
நீ போகவேண்டுமென்று அடமே பிடித்தாய்
போய் வா என்று அனுப்பிய பின்
அப்படியே கிடக்கின்றன
காதலும் மனமும்
இப்போது மின்மினியும் இல்லாது..

(துா்காவின் கவிதை வரி இது)

பேசியவைகள்
இந்த உறங்கும்
இரவில்
உன் நினைவுகளை
கனவுகளாக வருடலாம்...

நீ
தட்டச்சி செய்த 'செட்' எழுத்தில்
மாயங்களை நானும் நீயும் பதிக்கவில்லை
என்பதே போதும்...
கவிதைகளின் ருசியை என் வாசலில்
விதைத்துவிட்டு நீ உறங்குகுறாய்...
உனது கல்வியை கவிகைகள்
காத்திரமாக்கும் தோழி...

உறங்கும் உன்னிடம்
அழகிய கவிதைகள் மட்டும்
உன் புகைப்பட புன்னகை
போல் என் இருள் மனதில்
வண்ண விளக்காய் எரிகிறது...
நீ
உறங்குகுறாய்...
இங்கே என்னுடன்
விழித்திருக்கிறது
இதயத்தின் வசீகரங்கள்...

துா்காவுக்கு

Wednesday, September 16, 2009



இருப்பிடம் தவறிப்போன
தவிட்டுக் குருவியின்
தவிப்பை போல
நாளைய வாழ்வு பற்றிய
ஏக்கங்கள் எனக்கும்
தொற்றுகின்றது….

உனது முடிவை மாற்றிக் கொள்ளச்
சொல்லும்
வாழ்வின் வண்ணம்
ஒபபனைகளையும்
இனைத்து தூரப்படுத்துகிறது…

தீடீரென்று
காதலை முறித்து
மௌனமாகி போகும்
உனது குரல்களின்
வசீகர மர்மத்திற்கு
பின்பு மறைந்திருக்கும்
இரகசியங்களை உனது
கனவனோடும் பகிர்ந்து…
அந்நரங்மாக பெய்த
மழையின் வரிகளை உன்னால்
எப்படி மறக்க முடிகிறது…

உனது இதயத்தைப் பற்றிய
மையப் புள்ளயாக எனக்கு
மட்டும் காட்டிய மச்சத்தை
பற்றிய மனது மட்டும்
மையப்புள்ளியாக அவ்வப்போது
நீர்கோடுகளை
வரைகிறது…

உனது வசிகர நாட்களில்
எனது விரல்கள் தீண்டிய
குறியின் அடை மழையில்
முத்தங்களும் ஸ்பரிசங்களும்
உனது அம்மாவுக்காகவும்
அப்பாவுக்காகவும் மறந்து
போகலாம்…!!!

ஆனால்
மனவெளிகளில் இருள்காட்டில்
மிருகங்களை
உனது விளையாட்டு
பொம்மைகளைப் போல
உன் உறக்கத்தை
தட்டி எழுப்பலாம்…!

02

உனது மார்பு கசக்கும்
உதடுகளில்
பிம்பங்களும் நடு நெஞ்சின்
மையத்தில் உன் மச்சங்கள்
உனைப்பார்த்து
கேலி செய்து உனது
ஒழுங்கீனமான
நடவடிக்கையை
காலத்தின் இருள்கள்
உனது நிழலாக வரலாம்..?

உனது பிரார்த்தனைகளும்
வழிபாடுகளும்
உயிர்ப்பற்று சிதிலமாகலாம்…

பாவியுடனான வழிபாடாக
ஏதோ ஒன்றை
உனது ஆத்மா இழக்கலாம்…

அல்லது

உனக்கு மறப்பதற்கு
முடிவது இலகுவானதென்றால்
அனைத்தையும்
ஒரு பஸ் பயணத்தைப் போல
மறந்து விட்டு
குழந்தைகளை மடியில்
வைத்து கொஞ்சலாம்…

இன்னும் நீயும்
உன் கனவனும்
கிரிக்கெட் மெச் பார்க்கலாம…

சுதர்ஷினிக்கு….

Sunday, September 6, 2009

உனது வாசனை...

Saturday, February 28, 2009

தொடர்கிறது...


பறவைகளுக்காக
காத்திருந்தேன்...
மரணங்களின முன்
நேற்றிரவு வராத விருந்தினர்
சாலையெங்கும்
அவர்களின் வருகையுடன்
தொடர்கிறது...

Sunday, October 12, 2008

வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்


என் காலடித்தடங்கள்
தொலைந்து போயிருந்த
ஓர் நாளில்
உன்னை சந்திக்க
நேர்ந்தது....

வாழ்வு
யாருடைய சுதந்திரத்தையும்
அனுமதிககாமல்
நம்மை அழித்துக்
கொண்டிருக்கின்றது...!

உனனைப்பற்றி
சொல்லபடும்
புனைவுகளில்
எலலாம்
நம்மைப் பற்றிய
காதலை
ஊரில்
சீன வெடியாய்
கொழுத்தி
போட்டு
வேடிக்கை பார்க்கின்றது!
ஆனால்
நீ எத்தனை து}றம்
கலங்கி
போய் விட்டாய்
நம் காதல்
உன்
தன் வழி பயணத்தடைகளை
அழித்து
வட்டதை
மட்டும் தான்
தந்திருக்கின்றது...

நீ
எத்தனை
அற்புதமானவன்
கலீல் ஜிப்ரானின்
கவிதைகளைப் போல்
நீ எவ்வளவு
அழகானவள்..

அன்னை
தெரேசாவைப் போல்
நீ எவ்வளவு அன்டானவள்
நான்
தான்
பாப்லோ நெருடன்
கூறியது போல்
என் காதல் ஒரு
குழந்தையின்
கதறலை
தவிற
வேறொன்றும்
இல்லை...

நமக்க
புரிகின்ற
இந்த எளிமையான
வாழ்வுககு
முன்
நம்மை சுற்றியுள்ள
உலகத்திற்கு
சாதியும்
சடங்குகளும்
வர்க்கங்களும்
பெரிதாக
கெரிவதில்
ஏதேனும் அர்த்தங்கள்
இருக்கின்றனவா..?

சொல்லபடும்
மூன்றாவது காரணங்களுக்கு
முன்
நீயும் நானும்
வாழ்வில் நெடும்
து}றத்தின்
சரிவுகளில்
யாருக்கும்
தெரியாமல்
போனபடி
இருக்கின்றோம்...

இருவர்
சேர்ந்து வாழ
இருள்
வெளிகளில்
பரவும் கணணுக்கு தெரியாத
காரணங்களுக்கு முன்
வாழ்வின்; ருசி
அத்தனையும்
செத்து போகின்றதை
பாரத்தபடி
வாழ்வதென்பது
சகிக்க
முடியவில்லை பெண்ணே!

இயலாமை கசியும்
என்
இருப்பில் தொடரும்
வன்முறையின் கூர் மரணத்தின்; முன்
இன்றும்
முடிக்கமுடியாத படி
மீதமான வாழ்வு
என்னை பார்த்து சிரிக்க படி
இருக்கின்றது...

கடக்க நினைக்கிற
துயரங்களுக்கும்
எழுதி
செலலவும்
திரை
சுருளின்
வாழ்வின்
புனைவை பதிவு பண்ணவும்
என்கிற
ஒற்றை
காரணங்களுடனும்
மற்றும்
நம்முன் இருக்கும்
இயலாமையை
அழித்து
எப்படியாவது
எழுந்து நடக்க நினைக்கும்
ஒரே காரணத்திற்காக தான்
எழுதிக் கொண்டு...
வாழ்ந்துக் கொண்டு...
சினிமாவை நம்பி நானும்
நானை நம்பி சினிமாவும்
தற்கnhலை செய்யாது
இக்கணம் வரை வாழ்தல்
உறுதிப்படுகின்றது...
மற்றவைகள் எல்லாம்
பின்
தான்......

Friday, October 3, 2008

நீர் தேக்கங்களின் நினைவுகள்….







என் பிறந்த வீடு
அங்கிருந்து
ஆகற்றப்பட்டு விட்டது!

புலம் பெயர்ந்த
மனிதர்களுக்கு
வாழ்வளிக்காத நிலத்தை
நீர் தேக்கம் என்ன
நிரப்பி
விடுமா என்ன!

நேற்று
ஓடி விளையாடிய
கால்களின் வாசனையை
இனி
நாம் எங்ஙனம்
தேடுவது…..


அம்மாவின்
நினைவிலிருந்து
தேயிலை மலை முகடுகள்
மட்டுமல்ல
அப்பாவோடு வாழ்ந்த
வீடும் நிலமும்
தண்ணீரில் மூழ்கி
விட்டது…!

காற்றின் மணம்வீசும் புல்வெளிகளில்
புல் அறுத்த
அறுவாளின் பச்சையாக
சிக்கியிருக்கும் புல்லின்
இரத்தத்தை போல்
மாடு அசை போடும்
ஆதி நினைவில் மூழ்கி
மின்சாரம்
வராத
எனது லய காம்ராவில்
ஜப்பானியனின் கனவுக்கு
மட்டும்
உறுதி
தெரியும் நமது
வாழ்வில் இனியும்
ஒரு வீட்டில் வாழ்ந்த
காலத்தின் மழை
துளி
வடிந்தோடும்
நினைவில் இறுதி பாடலில்
வரிகளில் பாட்டியின்
மரணம்….

மூதாதையர்களின் எலும்பும்
மச்சையும் மீதமாக
காதலிக்கும் இனி
சென்று வருவதற்கு
வீடும் சொந்த ஊரும்
இல்லாமல்
மலைகளில் புலம்பெயர்ந்து
மலைகளின் முன்பு ஒரு
மலை வாசியாக
வாழ்தல்
மட்டும்
தகிக்கின்றது கருணைகள்
ஏதுமற்ற கடவுளின்
உள்ளார்ந்த
பொய்களினால்….