Wednesday, November 25, 2009

அரசிக்கு...



தீவாக கிடந்த
என் பாலை நிலம்
உன்னால்
அடர் மழையால்
பூக்கின்றதடி...

எங்கிருந்தாய் இவ்வளவு
காலமாக
தேசத்தை தாண்டிய நம்
காதல் மறுபடியும்
நேசத்தை தேடுகின்றது...!

உன் ஆன்மீகம் கொண்ட
காதலின் என்ஆத்மா
மறு பிறவி
அடைந்ததாகவே அறிகிறேன்...

ஏன் இந்த வாழ்க்கை
என்றே என் மனது
இதுநாள் வரை
நொன்னது பெண்னே..
ஆனால்
நீ இருப்பாய்
என்னுள் என்றும்
உயிராக என்ற போது
உனக்காக வாழ
சொல்கிறது வாழ்க்கையை...

தொலைந்திரந்த
என் கவிதை உன்னால்
உயிர்த்தெழுந்துள்ளன...
இனி நானும் நீயம் சேர்ந்து
எழுதி செல்லும்
கவிதைகள்
பிரபஞ்சத்தின் மொழியாக
நம் ஆத்மாவின் பாடலாக
ஒலிக்கவுள்ளதாக நீ
அறிவாயா காதலி...?

நீ கூறுயது போல்
ஆத்மா இழந்த எனது
இசையை உன் அன்பு
மொழிகளால்
ஒரு தாயின் பரிவுடன்
அணைக்கிறாய் கலை...

கலையரசி என் காதலின்
மொழியை மீண்டும்
என்னுள் புரிய செய்தவளே..
என்றும்
என்னையும் நீ நேசிக்கிறாய்...
என்னை நேசிக்க இந்த உலகத்தில்
நீ இருக்கின்றாய் என்ற ஒன்றே போதுமடி
உனக்காக என் ஆத்மா
ஆனந்தம் கொள்கிறது...