Tuesday, October 20, 2009

உனது வார்தைகள்...



இரவும் வந்தது

நீ போகவேண்டுமென்று அடமே பிடித்தாய்
போய் வா என்று அனுப்பிய பின்
அப்படியே கிடக்கின்றன
காதலும் மனமும்
இப்போது மின்மினியும் இல்லாது..
(துா்காவின் கவிதை வரி இது)

பேசியவைகள்
இந்த உறங்கும்
இரவில்
உன் நினைவுகளை
கனவுகளாக வருடலாம்...

நீ
தட்டச்சி செய்த 'செட்' எழுத்தில்
மாயங்களை நானும் நீயும் பதிக்கவில்லை
என்பதே போதும்...
கவிதைகளின் ருசியை என் வாசலில்
விதைத்துவிட்டு நீ உறங்குகுறாய்...
உனது கல்வியை கவிகைகள்
காத்திரமாக்கும் தோழி...

உறங்கும் உன்னிடம்
அழகிய கவிதைகள் மட்டும்
உன் புகைப்பட புன்னகை
போல் என் இருள் மனதில்
வண்ண விளக்காய் எரிகிறது...
நீ
உறங்குகுறாய்...
இங்கே என்னுடன்
விழித்திருக்கிறது
இதயத்தின் வசீகரங்கள்...