Friday, October 3, 2008

பகிரப்படாத கவிதைகள்







எழுதமுடியாத
கவிதைகளாக நம்
காதலின் மிகுதிகள் மட்டும்
நம்மில்
மிஞ்சி போனது

நீ
எழுதிய
போல், எப்போதும் எம்மில்
பகிரப்பட்ட எச்சங்களாய்
நம் கவிதைகள் மடடும்
என்றாய்
நிஜம்தான் பெண்ணே

விலகிச் சென்று
வெகு நாட்களான
பின்பும்
திருமணம் கூடி
வேறொருத்தியோடு வாழ்வை
பகிர முடியாது
திசை
தடுமாறிய
அந்நியனாகி போன
மிகுதி வாழ்வில்
நீ மட்டும்
மறக்க முடியாத
ரணங்களின் இசையை
என்னுள் எழுப்புகிறாய்

முதல் காதலையும்
முதல்
முத்தத்தையும்
எங்கே சென்று நான் தொலைப்பது…
போதும் இந்த வாழ்வு
என்றாலும்
சாவதற்கும் தையரிமற்று
மீளாத உனது ஞாபகங்களை
சதா காலமும்
சுமக்கும்
இந்த தணியனி;ன்
மிகுதி வாழ்வு மட்டும்
என்ன ஆற்று வெளிகளின்
கவிதைகளை தரவா போகின்றது.

யார் மேலும்
எந்த புகாரும் இப்போதும்
இல்லை!
நொறுங்கிய கனவுகள்
உன்னை விட்டு பிரிந்த
நாளில் எனக்கு
தெரியவில்லை
இப்போதுதான் நீ
என்னை விட்டு பிரிந்தது போல்
அறிகிறேன்…



எப்போதாவது
உன்னுடன் கைகோர்த்து
ஒரே ஒரு நொடி நேரம்
அந்த ப10ங்காவில்
நினைத்து நினைத்து பார்த்தேன்
பாடலை பாடி
இறந்து
விடவும்
இனியும் பிரியாமல் இருக்கவும்
எங்கேனும் ஒரு
சந்தர்ப்பம்
தோன்றாதா என்றே
மனம் விசுவாசப்படுத்துகின்றது
அக்னி
ஆனாலும் அக்னி
உன் கவிதைகளை
படிக்கும் போது
நெருப்பு கள்ளிகளாய்
என் இதயம்
எரிந்து கொண்டுதான்
இருக்கின்றது…


எப்போதாவது
உன்னுடன்
கைகோர்த்து
ஒரே ஒரு நொடி நேரம்
அந்த ப10ங்காவில்
நினைத்து நினைத்து
பார்த்தேன்
பாடலை பாடி
இறந்து விடவும்
இனியும் பிரியாமல் இருக்கவும்
எங்கேனும் ஒரு
சந்தர்ப்பம் தோன்றாதா என்றே
மனம்
விசுவாசப்படுத்துகின்றது
அக்னி
ஆனாலும் அக்னி
உன் கவிதைகளை
படிக்கும் போது
நெருப்பு கள்ளிகளாய்
என் இதயம் எரிந்து கொண்டுதான்
இருக்கின்றது…

1 comment:

மயூ மனோ (Mayoo Mano) said...

அருமையானதொரு கவிதை..