Friday, October 3, 2008

விழித்தடங்களில்





நீண்ட புதைகுழியின்
மரணங்கள்
பற்றிய
குறிப்புகளை தயார் செய்தபடி
கழியும் வாழ்நாட்கள்

கனிப்
பொறிகள்
அறைகளின்
வெட்கை கனலின்
பேச்சு துணையற்ற
முடியும்
கவிதையின் மொழி
குழந்தைகள்
வருகிறார்கள்
போகிறார்கள்
குழந்தைகளை
அதன்
அர்த்தங்களோடு புரிந்து
கொள்ள முடியாமல்
தவிக்கும் மனசு

ஓவியங்களின் நிழல்
பிம்பங்களின் கானல்
பொழுதில்
வெளியே
அடிக்கும்
வெய்யிலின் தணல்!

இருப்புக்களின்
மீதெழும்
அவநம்பிக்கையுடன்
மிகுதி வாழ்வை
நம்பிக்கையற்று
வரண்ட வழித்தடங்களில்
நான்

30.06.2005

No comments: