Friday, October 3, 2008

நான் என்ற நான்







ஒவ்வொரு முறையும்
தவற விடுகின்ற
புள்ளியிலிருந்து என்
வாழ்வின் முரண்கள்
வளர்கின்றன…!

வீட்டின்
இருள் மையத்தில்
ஒற்றைப் பனையுடனான
உரையாடல்கள்…
காற்றின் மழைத்துளிகள்
போல் நனைகின்றன…
தனிமையுற்றிருக்கின்றன
என் எல்லாக்கனவுகளும்…!

மற்றும் சில
செய்திகளுடன்
நான் என்னைத்தேடி
அலைகின்றேன்…!
இங்கிருந்தாவது
எங்காவது என்
“நான்” பற்றிய
விளக்கங்கள்
சிலந்தி வலையுடனான
சிதிலத்தில் அகப்பட்டிருக்கலாம்!
ஆக,
நான்
இத்தோடு
இன்றும்…

நன்றி:தெரிதல்

No comments: