Wednesday, August 13, 2008

மாய நகரம்








இரயில்
வண்டிகளின்
தண்டவாளங்களுடன்
மட்டும்தான்
ஆன் பெண் உறவைபொருத்த முடிகிறது…

சமிக்ஞை விளக்குகளுக்கு
மத்தியில்அரை
போதையில்
சத்தியம்
செய்தவள்
இன்று
வோறொருவனுடன்
இனைகிறாள் பிரிவின் துயரம்
பற்றியபரிவுகளற்று….

எல்லா நகரங்களிலும்
கடத்தல்களும்
கற்பழிப்புகளும்
மோசடிகளும்வரும் முன்பு
தெரிவதில்லை…

எல்லா நகரங்களிலும்மயானத்தை
நோக்கியபாதையின்
முடிவடைவது மட்டும்தான்
இறைவனின் விதியாம் !

அலுவலக
வேலைகளில்
காதலை துறந்தவளின்அம்மாவை
பற்றிய
கவிதைகள்
மட்டும்
ஏனோ
பொய்களினால்
அடுக்கப்பட்ட
வார்தைகளில்
பருவங்களின்
கடைசி பள்ளதாக்கில்
வசிப்பவனின் இரவுகளில் உதிரும்
காமத்தை யார் அறிவார்…!
நானும்
என் நண்பனும்சென்ற ஜென்மத்தில்
சபிக்கப்பட்ட
பிறவிகள்
அதனால்தான்
பெண்சினேகம் இல்லாத
பேய்களின்
ராத்திகளோடு
கைகளில் நீளும்வெண் நிற
இரவுகளில்
பொழுதை புணர்ந்து
புணர்ந்து சரிகிறேன்…

....................................................................
வீட்டில் ------ 29.05.2008
--------

No comments: