Saturday, August 2, 2008

வாசனை








.................................................................................
அவைகளை
தாண்டி
ஒரு கணம்
கூட
நடக்க முடியவில்லை என்னால்
கூந்தலை வருடும்
சங்கமித்தாவின்
மண்டப
இருட்டில் மழை ஈரம்
காயாத
உன் நிமர்ந்த
வாசனைதீராத
தாமரை
மொட்டுக்களை
நீ எனக்காக
எடுத்துக்கொள்ள
முழுவதுமாக
தயாராகி....எரியும்
காமத்தின்
தீராத தொண்டைக்
குழியில்
இறங்க
மறுக்கும்
உணவின் ரொட்டி
துண்டுடன்
எச்சில்களை
ருசிக்கும்
உதடுகளின் ஸ்பரிசம்
கரையாமல்
மனதில்
என்றும்அக்னியாய்

கொதிக்கும் எனது
தீராத
காயத்தின் உனது
காதல்களில் சங்கமங்கள்.....
நீ
மறுபடியும் என்
உதிர்ந்த வாழ்வை
பகிர்ந்துகொள்ள வர மாட்டாயா?
போஷிப்பதற்கு உணவும் குருதியும்
இல்லாமல்
வாழ்நாட்கள்
இசையற்று வரண்டது
இக்கனம் வரை…
உன்னுடன்
பகிர்ந்துகொள்ளாத
பருவங்களில்
வேதனை மட்டும் இல்லாது
அதிகாலை பனி மலர்களின்
கோலங்கள் போடும்
வாசலில்…

பஜனை பாடலின்
வரிகளில்…
ஒவ்வொரு பஸ் பயணத்திலும்…
உன்னால் அறிமுகமான
பேராதெனிய
நண்பனை
சந்திக்க செல்லும் போதெல்லாம்…
கூடவே நீ உனது
வாசனையை
இன்னும் என்னால்
மறந்துவிட முடியவில்லை!
ஒற்றை
வரியாவது பேசி
செத்துவிட்ட
ஆத்மாவின்
பாடலக்கு உயிர்பைதர மாட்டாயா?
ஒர் அன்பு வார்த்தை கூட
போதுமானது…

தொலை பேசியில்
நீ
வெறுக்கும்
நபராக நான்
உனது
நியாயங்கள்
எனது
இயலாமைகள் எல்லாம்
ஒரு கனவு
போல்
நடந்து விட்டன
நகரத்து
சாலைகளில்
ஒரு வழிப்போக்கனை
போல்
நீ எங்காவது
தென்படுவாயா
என்றே மனம் ஓடுகின்றது…
இருவருமே ஒரே நகரத்தில்
வாழ்வதாக
கேள்விப்படுவார்கள்
நீ எங்கும்
இல்லாது
நான் பொது
வழிகளில்
நினைவு பயணத்தின்
புழுக்கம்
தீராமல்
இன்னும் உன்னுடன்
வாழ்கிறேன்…!
.............................................................................


பேராதெனிய பல்கலைக்கழகவிடுதியில்


22.04.2007 மாலை: 07.00 மணிக்கு

No comments: